ஏலே இளங்கிளியே பாடல் வரிகள் நினைவு சின்னம் - Lyrics Views : 180
Tagged in : Lyrics
0 0
Send mail

ஏலே இளங்கிளியே பாடல் வரிகள் நினைவு சின்னம்




ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே
ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே
நோன்பு பல நானிருந்து வேண்டும் வாரம் வேண்டி நிற்க
நோன்பு பல நானிருந்து வேண்டும் வாரம் வேண்டி நிற்க
தெய்வம் தான் தந்தது உன்னைத் தான் இளங்கிளியே

ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே

குழலோடும் யாழோடும் இசை கேட்ட போதும்
மழலை உன் சொல் போல இசை ஆவதேது
குழலோடும் யாழோடும் இசை கேட்ட போதும்
மழலை உன் சொல் போல இசை ஆவதேது
யாரடி உன்னைப் படைத்தார்
அன்னையும் தந்தையும் இல்லை
உன்னை என் கையில் கொடுத்தார் தெய்வமா நம்பவுமில்லை
அன்பிலே அன்பை இணைத்து வம்புகள் செய்வதும் என்ன
உண்மை தான் சொல்லடி செல்வமே சிரிக்காதே

ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே

மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போல தமிழ் பாடும் கொடியே
மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போல தமிழ் பாடும் கொடியே
மூடடி வாசற் கதவை
கண்கள் தான் பட்டு விடுமே
பாடடி பாசக் கவிதை
நெஞ்சகம் தான் கெட்டு விடுமே
என்றைக்கோ எழுதி வைத்தான்
இன்றைக்கே நடப்பதெல்லாம்
உண்மை தான் முல்லையே
என்னையே நான் மறந்தேன்

ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே
நோன்பு பல நானிருந்து வேண்டும் வாரம் வேண்டி நிற்க
தெய்வம் தான் தந்தது உன்னைத் தான் இளங்கிளியே

ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே

பாடல்: ஏலே இளங்கிளியே
திரைப்படம்: நினைவுச் சின்னம்
பாடியவர்: பி. சுசிலா
இசை: இளையராஜா


By Geethalakshmi, On - 2011-07-27



    Login to add Comments .