குர்ஆன் திரட்டப்பட்ட விதம் - தமிழ்/Tamil Views : 227
Tagged in : தமிழ்-Tamil
0 0
Send mail

குர்ஆன் திரட்டப்பட்ட விதம்


ஒன்றன் பின் ஒன்றாக நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ இறங்கிக் கொண்டிருக்க அவற்றை அவ்வப்போது நபி(ஸல்) அவர்கள் காதிப் வஹி வாசிகளை அழைத்து எந்த வசனங்களை எத்துடன் இணைத்து எழுதவேண்டும் என்ற ஒழுங்கு முறைப்படி வரிசைக் கிரமமாக எழுதுமாறு பணித்தார்கள். மேலும், குர்ஆனைத் தவிர நான் கூறும் எதையும் எழுதிவிடாதீர்கள் என நபிகளார்(ஸல்) உத்தரவிட்டிருந்தார்கள். ஆக குர்ஆனைத் இப்பொழுதுள்ள நிலையில் ஒழங்கு படுத்தி திரட்டித் தந்தது நபி(ஸல்) அவர்களே. இன்று மக்கள் மத்தியில் சிலர் குர்ஆனை தொகுத்தவர் அபூபக்கர்(ரலி) ஈமானில் நிறைந்தவர் உஸ்மான்(ரலி) என்று புகழ் பாடும் கூற்று சரியல்ல. அபூபக்கர்(ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில் உமர்(ரலி) அவர்கள் ஆலோசனையின் பேரில் ஜைது இப்னுஸாபித்(ரலி) அவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்ட ஒரு குழு காதிப் வஹி, குர்ஆனை முழுவதும் மனனம் செய்திருந்தோர், ஆகியோரை அழைத்து அவர்களின் ஏடுகளில் உள்ள வசனங்களை முழுவதும் சரிபார்க்கப்பட்டு அதனை ஒரு பிரதியாக ஆக்கி அது உமர்(ரலி) அவர்களிடம் ஒப்படைக்கபட்டது. உமர்(ரலி) அதனை தன் மகள் ஹப்ஸா(ரலி) (நபிகளாரின் மனைவி) அவர்களிடம் ஒப்படைத்துச் சென்றார்கள். பின்னர் உஸ்மான்(ரலி) அவர்கள் காலத்தில் ஹப்ஸா(ரலி) விடமிருந்து குர்ஆனின் அப்பிரதியைப் பெற்று பல பிரதிகளாக அதனை எழுதி உலகின் எல்லா பாகங்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. அப்பிரதிகளில் ஒன்று துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் இன்னும் உள்ளது.
By Geethalakshmi, On - 2012-01-25



    Login to add Comments .