ஒளியமைப்பு

by Geethalakshmi 2010-03-01 00:09:24

ஒளியமைப்பு


பார்வை மனித வாழ்வின் முக்கிய அம்சங்களில் ஒன்று. இதனால் பார்வைப் புலனுக்கு அவசியமான ஒளி மனிதனுக்கு மிகவும் அடிப்படையான, அவசியமான ஆற்றல்களுள் ஒன்றாகிறது. மனிதனுடைய பல்வேறு வகையான தேவைகளுக்காக ஒளியை வழங்குவதற்கான தொழில் நுட்பமே ஒளியமைப்பு ஆகும்.

ஒளியின் முதன்மையான மூலம் சூரியன் ஆகும். தொடக்கக்கால மனிதர்கள் ஒளி தேவைப் படக்கூடிய தமது செயற்பாடுகளை எல்லாம் பகலிலேயே வைத்துக்கொண்டனர். தீயைக் கட்டுப்பாடாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட பின்னர் இரவிலும் ஒளியை பெறக்கூடிய செயற்கை முறைகள் உருவாக்கப்பட்டன. மிக அண்மைக்காலம் வரை தீப் பந்தங்கள், மெழுகு திரி, எண்ணெய் விளக்குகள் என்பவையே இரவு நேர ஒளி மூலங்களாகப் பயன்பட்டு வந்தன.

மின் விளக்குகள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே இரவையும் பகல் போலக் கருதிச் செயற்படக்கூடிய வல்லமை மனிதருக்குக் கிடைத்தது. தற்காலத்தில் இரவில் மட்டுமன்றிப் பகலிலும் கட்டிடங்களுக்குள் சூரிய ஒளி போதிய அளவு கிடைக்காத பகுதிகளிலும், சிறப்பான காட்சி விளைவுகளை உருவாக்க வேண்டிய சந்தர்ப்பங்களிலும், கட்டுப்படுத்தப்பட்ட முறையில் ஒளியைப் பயன்படுத்தவேண்டிய இடங்களிலும் மின் ஒளியே பயன்படுத்தப்படுகின்றது.

நவீன ஒளியமைப்பை இரண்டு வகைகளாகக் கருத்தில் எடுக்கலாம்.

1. இயற்கை ஒளியமைப்பு
2. செயற்கை ஒளியமைப்பு
1283
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments