காப்புப் பருவம் - முருகன் பிள்ளைத்தமிழ்

by Geethalakshmi 2010-04-29 22:20:37

காப்புப் பருவம் - முருகன் பிள்ளைத்தமிழ்


“சோ” வென்று கொட்டுமழையே - கொடி

மின்னலுடன் இடிக்கின்ற் இடியே – தமிழ்ப்

'பா' வொன்று கேட்டிட காவலனாய் வந்திட்ட அரசே

இன்னல் ஏதுமின்றி காத்தருளே

'ஆ' வென்று அழுதுகொண்டே பிறக்கவில்லை என்றாலும்

அனைத்து சக்தியும் ஒன்றாகத் திரட்டி

“சே” யென்று பிறந்திட்டான் எங்கள் குமரன்

உனைத்தான் வேண்டுகின்றோம் உள்ளம் ஒன்று பட்டு

'கா' வென்றே தாள் வீழ்கின்றோம், காத்தருளே!

இறைவா காத்தருளே!
1415
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments