தாலப் பருவம் - முருகன் பிள்ளைத்தமிழ்

by Geethalakshmi 2010-04-29 22:23:35

தாலப் பருவம் - முருகன் பிள்ளைத்தமிழ்


பொதிகைச் சந்தனத்தின் மணம் கூட்டி

குறு முனிக்குத் தமிழை

ஓதிவிட்டு உலகெங்கும் தவழவிட்டாய் தமிழ்த்தாயை

எங்கள் தாய்க்கும் தாயாகிவிட்டவனே

தாதியர் தாலாட்டுகின்றார், தங்கத் தொட்டிலிலே

தாலேலோ, தாலேலோ!

யாரதிகம் போட்டியில் பிரமனை, மாயவனைத்

திகைக்க வைத்து தானுயர்ந்த தந்தைக்கும்

நீயதிகமாகி மந்திரத்தை சொல்லவந்த திருக்குமரா

தாலேலோ, தாலேலோ!
1780
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments