தாலாட்டுப் பாடல்கள்

by savitha 2009-12-05 12:36:32

குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தலாட்டு ஆகும். தலாட்டு நாட்டார் பாடல் வகைகளில் ஒன்று. வாழ்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தலாட்டுக்கள் நாட்டாரியல் ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.


தாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று.

பட்டுப் பாப்பா தூங்கு!-நீ
பாலும் குடித்தாய் தூங்கு!
மொட்டில் மணக்கும் முல்லை!-என்
முத்தே என்ன தொல்லை?
சிட்டாய் ஆடிப் பறந்தாய்-உன்
சிரிப்பால் எங்கும் நிறைந்தாய்.
பிட்டும் தருவேன் தூங்கு!-என்
பெண்ணே கண்ணே தூங்கு!
எழுதியவர் பாரதிதாசன்
2529
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments