அல்குர்ஆனின் சிறப்புகள்

by Geethalakshmi 2012-01-25 13:55:13

அல்குர்ஆனின் சிறப்புகள்


அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் தான் விரும்புவது போல் வாழ்ந்து கொள்ள விட்டுவிடாமல் வாழ்க்கை நெறியை வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் வகுத்துக் கொடுக்கின்றான். இந்த அடிப்படையில் மனித சமுதாயத்திற்கு வேதமாக அல்குர்ஆனையும் தூதராக முஹம்மது(ஸல்) அவர்களையும் அனுப்பியுள்ளான். எனவே நமது வாழ்க்கையை நாம் நினைப்பது போன்றெல்லாம் அமைத்துக் கொள்ளாமல் அல்குர்ஆனும் நபிமொழியும் காட்டித்தரும் நெறியிலேயே அமைத்துக் கொள்ள வேண்டும். இதுவே முஸ்லீமின் உயரிய பண்பும் குர்ஆன் மற்றும் சுன்னாவின் எதிர்பார்ப்புகளும் ஆகும். மார்க்கத்தின் இவ்விரு அங்கங்களில் முதலிடம் பெறுவது அல்குர்ஆன் ஆகும்.


அல்குர்ஆனுடன் இரண்டு விதமான தொடர்புகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.
1. திருக்குர்ஆனை பொருளறிந்து படிப்பது. அதன் கட்டளைகளைப் புரிந்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது.
2. அல்குர்ஆனை அதிகமாக ஓதி அளவற்ற நன்மையைப் பெற்றுக் கொள்வது.
1691
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments