ஆலயமணியின் ஓசையை - பாலும் பழமும்

by Sanju 2010-02-04 16:04:22

படம் : பாலும் பழமும்
பாடல்: ஆலயமணியின் ஓசையை
குரல்: சுசீலா
வரிகள்: கண்ணதாசன்


ஆலயமணியின் ஒசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே எனப்பாடும் ஒலி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்

இளகும் மாலைப் பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்

(என் இறைவன்)

காதல் கோயில் நடுவினிலே கருணைத் தேவன் மடியினிலே
யாரும் அறியாப் பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே...
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே

(என் இறைவன்)

Tagged in:

2023
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments