உதய கீதம் - பாடு நிலாவே தேன் கவிதை

by Sanju 2010-02-09 22:24:35

உதய கீதம்
இளையராஜா

பாடல்: பாடு நிலாவே தேன் கவிதை
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி


பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன்

(பாடு நிலாவே)

நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமலே போகுமோ
கைதான பொதும் கை சேரவேண்டும்
உன்னொடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறுமே

பாடு நிலவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன்

(பாடு நிலாவே)

ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு சேரும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர வேண்டும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே

(பாடு நிலாவே)

Tagged in:

2067
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments