உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
இளையராஜா
பாடல்: ஒரு ராகம் தராத வீணை
குரல்: கே ஜே ஏசுதாஸ், எஸ் ஜானகி
ஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி
அழகான கைகள் மீட்டும் வேளை
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
நதியின் வேகம் பருவ மோகம் கடலைச்சேர மாறிப்போகும்
நாளும் காதல் ராகம் பாடும் பாடும்
இதழில் போடும் இதழின் காயம் இதழிலாறும் இனிமையாகும்
தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம்
உன்னை வாழ்த்திப் பாடும் ராகம் உதயராகமோ
நம்மை வாழ்த்தும் நமது உலகம் உதயமாகுமோ
புது கனவுக் காலம் தெரிந்ததே
நெஞ்சினில் இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை
ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை
இளமைக் காட்டில் இனிமைக் கூட்டில் இருக்கும் தேனை எடுக்கும்போது
காலம் நேரம் தேவை இல்லை இல்லை
மலையின் ஓரம் மலர்ந்த பூவைப் பறிக்கும் வீரம் இருக்கும்போது
காவல் தாண்டும் பூவை முல்லை முல்லை
மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி
பாணம் போடும் காமன் நேரம் கூடத்தானய்யா
அட மனதில் சாரல் அடித்ததா
அத்தனை அற்புதம் என்னமோ பண்ணுது
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை