ஒரு ஓடை நதியாகிறது - தலையைக் குனியும் தாமரையே

by Sanju 2010-02-09 22:28:02

ஒரு ஓடை நதியாகிறது
இளையராஜா

பாடல்: தலையைக் குனியும் தாமரையே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், ராஜேஸ்வரி


தலையைக் குனியும் தாமரையே (2)
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து (2)

(தலையைக்)

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
ஆஅ...
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பாற்கடலின் ஓரம் பள்ளிகொண்ட நேரம்
அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து

(தலையைக்)

காத்திருந்தேன் அன்பே - இனிக்
காமனின் வீதியில் தேர் வருமோ
பூமகள் கன்னங்கள் - ஒரு
மாதுளை போல் நிறம் மாறிடுமோ
ஆயிரம் நாணங்கள் - இந்த
ஊமையின் வீணையில் இசை வருமா
நீயொரு பொன்வீணை - அதில்
நுனிவிரல் படுகையில் பலசுரமா
பூவிரகந்தது முதல்முறையா
வேதனை வேலையில் சோதனையா
புது முறையா இது சரியா
சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி (2)
இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்

(தலையைக்)

Tagged in:

1846
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments