கவிதையே தெரியுமா ?

by bharathi 2010-02-08 09:17:58

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே

குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே
மனதை பிரித்த கொலுசே
என் மடியில் விழுந்த பரிசே
ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து
என்னை தாலாட்டுதே
வானம் காணாத வென்னிலவொன்று மோக பாலூட்டுதே
நாணம் பொய் நீட்டுதே

உயிரில் இறங்கி வரவா ? உடலில் கரைந்து விடவா ?
உறக்கம் திறக்கும் திருடா
என் கனவில் பதுங்கி இருடா
புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா ?
இருவரின் ஆடை இமைகளே ஆகா இரவை நாம் ஆளவா ?
வேர்வை குடை தேடவா .

Tagged in:

1789
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments